പുഴപ്പേച്ച്

സുകുമാരന്‍


കരയിലിരുന്ന്
ഓടുംപുഴയെ നോക്കിക്കൊണ്ടിരുന്നു,
അവള്‍.
അവളോടു മിണ്ടിക്കൊണ്ടിരുന്നു, ആറ്
ആറ്റില്‍ എല്ലാം ഓടിയൊഴുകിക്കൊണ്ടിരുന്നു.
കാറ്റ് ഓടിക്കൊണ്ടിരുന്നു,
മരങ്ങള്‍ ഓടിക്കൊണ്ടിരുന്നു,
തെരുവുകള്‍ ഓടിക്കൊണ്ടിരുന്നു,
വീടുകള്‍ ഓടിക്കൊണ്ടിരുന്നു,
അവളും ഓടിക്കൊണ്ടിരുന്നു.
അവള്‍ ഓടിക്കൊണ്ടിരുന്നപ്പോള്‍
കാറ്റും മരങ്ങളും പക്ഷികളും
മേഘങ്ങളും സൂര്യനും
ഓടാതിരുന്നു.
അവള്‍ വീടെത്തിയപ്പോള്‍
ഓടാതിരുന്നത് ആറ്.
ഓടിക്കൊണ്ടിരിക്കുന്നു അവള്‍ മാത്രം
ആറിനോടു പേശിക്കൊണ്ട്.

(മൊഴിമാറ്റം വി.എം.ഗിരിജ)


நதிப் பேச்சு



கரையிலமர்ந்து
ஓடும் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள்
அவளுடன் பேசிக்கொண்டிருந்தது ஆறு.

ஆற்றில்
எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன
காற்று ஓடிக்கொண்டிருந்தது
மரங்கள் ஓடிக்கொண்டிருந்தன
பறவைகள் ஓடிக்கொண்டிருந்தன
மேகங்கள் ஓடிக்கொண்டிருந்தன
சூரியன் ஓடிக்கொண்டிருந்தது.

தெருக்கள் ஓடிக்கொண்டிருந்தன
வீடுகள் ஓடிக்கொண்டிருந்தன
அவளும் ஓடிக்கொண்டிருந்தாள்.

அவள் ஓடிக்கொண்டிருந்தபோது
காற்றும்
மரங்களும்
பறவைகளும்
மேகங்களும்
சூரியனும்
ஓடாமல் நின்றன.

அவள் வீடு திரும்பியபோது
ஓடாமலிருந்தது ஆறு
ஓடிக்கொண்டிருக்கிறாள் அவள் மட்டும்
ஆற்றுடன் பேசிக்கொண்டே.

No comments:

Post a Comment