വി. എം. ഗിരിജ
മുറിതോറുമിറങ്ങിക്കേറീ
അവിടില്ലാ നീയെന്നാലും..
അലമാര തുറന്നുമടച്ചും
ജനലക്കലിരുന്നുമെണീച്ചും
ചെവിയോര്ത്തും കണ്കൂര്പ്പിച്ചും
സമയം പോയ്, ഒരുപാടിപ്പോള്.
ഇലചിതറും മുറ്റത്തേക്കു-
മകത്തേക്കും മഴയത്തേക്കും
മഴയിറ്റും പ്ലാവിന്ചോട്ടിലു-
മിറയത്തും കേറിയിറങ്ങീ.
വെയിലത്ത് കിടന്നുരുളുന്നു
വരയന്മാര് പൂച്ചക്കുട്ടികള്
അവരോടു കലമ്പാന്, ദേഷ്യം
മുനകൂര്പ്പിച്ചെത്തും നീയെ-
ന്നൊരു നിമിഷം കാത്തൂ..
ചോരയില് ഒരു വേദന
തിരയിളകുന്നു.
തിരയായിസ്സിരകള് തോറും
പടരുന്നു മറിവിക്കോര്മ്മ.
മൃദുലോഹം കൊണ്ടു ഖനിച്ചോ
ചുടുചോരച്ചോല നനച്ചോ
കടലായ് മൃതിയോളം പ്രാണന്
തലതല്ലിച്ചെന്നു കവര്ന്നോ
തിരികെ വരുമെങ്ങനെ നീ
ഞാന് കരയുന്നു മുലപ്പാലെല്ലാം
തനിയുപ്പായ് വറ്റിയപോലെ.
നനുപുല്ലിന് പച്ചപ്പട്ടില്
തിരിയൊച്ചയുമില്ലാതേതോ
രഥമുരുളുന്നുണ്ടതു പോകും
വഴി ലോകാലോകം പോലെ-
ത്തെളിവാര്ന്നുമിരുട്ടാര്ന്നു
ചുരുള് ചുരുളായിപ്പുകയും ചൂടും
നറുപാല്പ്പുഴയും പിണയുംപോല്
ഒഴുകുന്നതു മഥുരയിലേക്കോ?
ഇവിടെയിരുന്നതു കാണാം,
പുല്ലുകള്, വഴികള്, മരുതുമരങ്ങള്;
മൈക്കണ്ണിപ്പൈക്കൂട്ടം, പാല്-
ക്കിണ്ണങ്ങള് വെണ്ണപ്പാത്രം.
മണ്തരികള് മണക്കും വായയി-
ലില്ലാത്തവയില്ലെന്നമ്മക്കു-
ള്ളലിവും വിസ്മയവും പാല്-
ക്കണ്ണീരും ദാമോദരവും
എന്നാലും പോകണമെന്നോ
മഥുരക്കീ ചെറുബാല്യങ്ങള്,
കാണാമത് തേര്ക്കൊടിയാട്ടം,
പാളത്തില് വണ്ടിച്ചക്രം,
ദൂരേയൊരു പുഷ്പകഘോഷം
വേരുകള്, പൊട്ടും ശബ്ദംപോല്
മഴയത്തുമിരുട്ടത്തും പൊന്വെയിലത്തും
ധനുമാസത്തിന് മൃദുമഞ്ഞിലുമ-
മ്മക്കോര്മ്മയില് മഥുരക്കുള്ളൊരു
വഴി മാത്രം.
മഥുരക്കേ പോകണമെന്നോ
ചുരുള്മുടി മുഖചന്ദ്രനെ മൂടും
വിരലാലേ മാറ്റിത്തെളിയും
മധുരിക്കും കൗമാരങ്ങള്?
കുന്നിന്കുട കൈയ്യിലെടുത്തും
പുഴവെള്ളം മധുരിപ്പിച്ചും
പൂക്കള് കോര്ത്താറ്റിന് വക്കില്-
പ്പൂത്ത മരം പോലെ നിന്നും
കരയിച്ചും കിക്കിളിയാക്കി-
ചിരിയിച്ചും കഴിയേണ്ടുന്നോര്
പോകണമവരെന്നോ മഥുരയില്
വേഗതതന് മായാപുരിയില്?
...
മക്കളെ കൗമാരത്തിലേ പിരിയുന്ന കേരളത്തിലെ അമ്മമാരുടെ ഉള്ളിലെ മഥുരയാണ് ഇവിടെവിടെയോ ആവാം.
மதுரா, பங்களூரிலோ அமெரிக்காவிலோ இருக்கிறது
அறைதோறும் ஏறி இறங்கினேன்
அங்கில்லை நீ என்றபோதும்
அலமாரியைத் திறந்து மூடியும்
ஜன்னல் அருகில் அமர்ந்து எழுந்தும்
செவிசாய்த்தும் கண்கூர்ந்தும்
பொழுது மிகப் போனது இப்போது
இலைசிதறும் முற்றத்திலும்
உள்ளே நுழைந்தும் மழையில் வெளியேறியும்
மழைசொட்டும் பலா மரத்தடியிலும்
தாழ்வாரத்திலும் ஏறி இறங்கினேன்
வெய்யிலில் கிடந்து புரள்கின்றன
வரிச் சருமப் பூனைக் குட்டிகள்
அவற்றை விரட்டக் கோபம் தீட்டி
வருவாய் நீயென்று ஒரு நொடி காத்திருந்தேன்
உதிரத்தில் ஒரு நோவு
அலையடிக்கிறது
அலையலையாச் சிரைகளுக்குள்
படர்கிறது மறதியின்மேல் நினைவு
மென் உலோகத்தால் அகழ்ந்தோ
வெங்குருதிச் சோலையை நனைத்தோ
ஞாபகக் கடலில் தலைமோதி உயிர் கவர்ந்தோ
எப்படித் திரும்பி வருவாய் நீ?
அழுகிறேன் நான்
முலைப்பால் ஒட்ட வற்றி
உப்பானது போல.
மென்புல் பச்சைப்பட்டில்
துளி அரவமும் இல்லாமல்
ஏதோ ரதம் உருள்கிறது; அதன் வழியில்
உலகான உலகங்கள் துலங்குகின்றன
இருண்டு சுருளாக நெளிந்தெழும் புகையும்
செம்மையும் நறும்பாலும் ஒழுகிச் செல்வது மதுராவுக்கா?
இங்கிருந்து பார்க்கலாம்; புற்களை
வழிகளை மருத மரங்களை
கருங்கண் கறவைக் கூட்டத்தை
பாற்குடங்களை வெண்ணெய்த் தாழிகளை.
மண்துகள் மணக்கும் வாய்க்குள்
இல்லாததே இல்லை என்று அன்னைக்கு
அக நெகிழ்வு, வியப்பு, பால் கண்ணீர்,
சுமந்த உதரம். ஆயினும்
போயாக வேண்டும் இந்தப் பிஞ்சுகள் மதுராவுக்கு.
காணலாம் தேர்கோடி அசைவை
தண்டவாளத்தில் வண்டிச் சத்தத்தை
தொலைவில் புஷ்பக ஆரவாரத்தை, வேர்களை,
நொறுங்கும் ஒலியை, மழையிலும் இருளிலும்
பொன்வெய்யிலிலும் மார்கழிப் பனியிலும்.
அன்னையின் நினைவில் மதுராவின் வழிகள் மட்டும்.
முகநிலவை மூடும் சுருள் முடியை
விரலால் ஒதுக்கியதும் மிளிரும் பால்யங்கள்
மதுராவுக்குப் போகத்தான் வேண்டுமா?
குன்றைக் குடையாகக் கையிலேந்தியும்
நதிநீரை இனிப்பாக்கியும்
பூக்கள் மிதக்கும் ஆற்றங்கரையில்
பூமரமாக நின்றும்
அழச்செய்தும் கிச்சுகிச்சு மூட்டிச்
சிரிக்கச் செய்தும் இருக்கவேண்டியவர்கள்
போகத்தான் வேண்டுமா மதுராவுக்கு?
வேகத்தின் மாயாபுரிக்கு?
(Translated by Sukumaran)
No comments:
Post a Comment